வானமழை நீயெனக்கு: அழகூர். அருண். ஞானசேகரன்


வானமழை நீயெனக்கு , வான்முகிலாய் எனைநாடி
வந்திட்டு கருணைமழை தனைபொழிய வேண்டும் ;
வளமையதைப் பெருகிடும் தேவதையாய் நீவந்து
வற்றாது மகிழ்வூட்டும் மனங்கொள்ள வேண்டும் !
கானமதாய் நீயெனக்கு என்னாளும் வாழ்வினில்
கத்தும்குயி லோசையென மகிழ்வூட்ட வேண்டும் ;
கவிதையாய் , குழலதாய் , இன்னிசை யாழதாய்
கருத்தினில் என்னாளும் நிலைகொள்ள வேண்டும் !
தேனமுதம் நீயெனக்கு என்றாகி வாழ்வெலாம்
தித்திக்கும் சுவைகூட்ட நான்மகிழ வேண்டும் ;
தென்றலாய் என்வாசல் தன்னில்நீ வீசிவந்து
திளைப்பூட்ட உன்விழிப் பார்வையொன்று போதும் !
ஆனமுத லாகிவந்து வளமதனைக் கூட்டிட்டு
அனைவரும் எனையறியும் வகைசெய்ய வேண்டும் ;
அகிலமே அறிந்திட என்நிலையும் உயர்ந்திட
அதிர்ஷ்டதே வதையுன்னை நானடைய வேண்டும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...